districts

img

மனு அளித்து சோர்ந்து போன பட்டியலின மக்கள்

மயிலாடுதுறை, ஜூலை 6 -
குடியிருக்க இடமில்லாத பட்டியலின மக்கள், காலங்காலமாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து சோர்ந்து போன நிலையில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 30 காலனி வீடுகள் கட்டப்பட்டன. 

இதில் கடும் நெருக்கடியோடு 60-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரே வீடுகளில் பலர் கடும் நெருக்கடியோடு வசிக்கும் அவல நிலையில், வீடு கட்ட இடம் கேட்டு அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மனு அளித்து போராடி வந்தனர். இது மட்டுமின்றி, அதே பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் அரசு நத்தம் புறம்போக்கு இடத்தை தங்களுக்கு பிரித்து தர வேண்டுமென, கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் குடிமனைப் பட்டா கேட்டு குடிசை கட்டி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, சி.விஜயகாந்த், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கே.கேசவன், சீர்காழி ஒன்றியச் செயலாளர் அசோகன், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, ஏகோஜி மகாராஜபுரம் கிராம பொறுப்பாளர் கலியன், சேட்டு மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

‘செங்கொடிதான் எங்களுக்கு தெம்பு’

குடிசை கட்டி குடி யேறும் போராட் டத்தின் போது, தங்களது குழந் தைகளை குடி சையின் முன்பு அமர வைத்து விட்டு ஒரு தம்ப தியினர் கட்டுமா னப் பணியில் ஈடு பட்டனர். அப்போது குழந்தைகள் “செங்கொடிதான் எங்களுக்கு தெம்பு” என்ற பார்வையோடு அமர்ந்திருந்த காட்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளை வெகுவாக கவர்ந்தது.